search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் கான்ஸ்டபிள்"

    • கடந்த 2023ல் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியது
    • கான்ஸ்டபிளாக இருந்த போதும் உதய் கிருஷ்ணா ரெட்டியை அழைத்த சர்கிள் இன்ஸ்பெக்டர் சுமார் 60 போலீசார் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்

    கடந்த 2023ல் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 1,016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்திய நிலையில் தனது போலீஸ் கான்ஸ்டபிள் வேலையை ராஜினாமா செய்த உதய் கிருஷ்ணா ரெட்டி இந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தேசிய அளவில் 780வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    சாதாரண அரசுப் பள்ளியில் தெலுங்கு வழியில் படித்த உதய் கிருஷ்ணா ரெட்டிக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 2018- வரையில் காவல்துறையில் கான்ஸ்டபிளாக அவர் பணியாற்றி வந்தார். கான்ஸ்டபிளாக இருந்த போதும் உதய் கிருஷ்ணா ரெட்டியை அழைத்த சர்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனிப்பட்ட வெறுப்பு காரணமாக சுமார் 60 போலீசார் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.

    இதனால் விரக்தி அடைந்த உதய் கிருஷ்ணா ரெட்டி அன்றைய தினமே போலீஸ் பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகிய நிலையில், தீவிர பயிற்சி மேற்கொண்டு தற்போது யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

    தனது இந்த சாதனை குறித்து பேசிய உதய் கிருஷ்ணன் ரெட்டி, "என்னை அவமானப்படுத்திய சர்கிள் இன்ஸ்பெக்டர் தனது தவறை ஒருநாள் உணர்வார். உயர் அதிகாரிகளுக்கும் கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை களைய நான் முயற்சிப்பேன்

    780வது இடம் பெற்றுள்ள உதய் கிருஷ்ணா ரெட்டி, இந்திய வருவாய் சேவைக்கு நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், இந்திய நிர்வாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடர்ந்து தேர்வு எழுதப்போவதாக உதய் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.

    ×